Wednesday, October 24, 2012

அவரைக்காய் மசாலா

  • பட்டை அவரைக்காய் - 200 கிராம்
  • மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
  • மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
  • உப்பு - தேவைக்கு
  • மல்லி இலை - சிறிது
  • அரைக்க:
  • தேங்காய் துண்டு - ஒன்று(சிறியது)
  • சீரகம் - ஒரு தேக்கரண்டி
  • தாளிக்க:
  • கடுகு - அரை தேக்கரண்டி
  • உளுந்து - அரை தேக்கரண்டி
  • வெங்காயம் - ஒன்று
  • தக்காளி - ஒன்று
  • பச்சைமிளகாய் - ஒன்று
  • கறிவேப்பிலை - சிறிது
  • எண்ணெய் - 2 தேக்கரண்டி



 அவரைக்காயை சிறியதாக நறுக்கவும். வெங்காயம், தக்காளியையும் நறுக்கி வைக்கவும்  தேங்காய், சீரகத்தை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.  அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.  அரைத்த மசாலாவை போட்டு நன்கு பச்சை வாசனை போக வதக்கி அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பிரட்டவும். அதில் அவரைக்காய், உப்பு போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி வேக விடவும். 
தண்ணீர் வற்றி காய் வெந்ததும் அடுப்பை அணைத்து விட்டு மல்லி இலை தூவி இறக்கவும். சுவையான அவரை மசாலா ரெடி

No comments:

Post a Comment