- புடலங்காய் - 2
- உருளைக்கிழங்கு - 1
- பட்டாணி - 1/4 கப்
- தக்காளி - 1
- பெரிய வெங்காயம் - 1
- பச்சை மிளகாய் - 5
- இஞ்சி - சிறிதளவு
- கறிவேப்பிலை - 1கொத்து
- கொத்துமல்லி - 2 ஸ்பூன்
- மஞ்சள் - 1/2 ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- கடுகு - 1/4 ஸ்பூன்
- எண்ணெய் - 3 ஸ்பூன்
- உப்பு
- ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு போட்டு வெடித்தவுடன் சீரகம், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- பின்னர் மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, மஞ்சள், தக்காளி சேர்த்து வதக்கி வேகவைத்த பட்டாணி, உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து கிளறவும்.
- புடலங்காயை விரல் நீளத்துண்டுகளாக நறுக்கி, மசாலாவை உள்ளே வைக்கவும்.
- பின்னர் புடலங்காயை 15 நிமிடம் வேகவைத்து பரிமாறவும்.
No comments:
Post a Comment