காய்கறி, சோள பராத்தா
தேவையான பொருட்கள்:
சோள மாவு – 21/4 கப்
பசலைக்கீரை – 1 சிஜீய கட்டு
காலிபிளவர் – 1 சிறியது
எண்ணெய் – 2 மேஜைக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி – 1 தேக்கரண்டி
செய்முறை:
காலி பிளவர், பசலைக்கீரை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
சிறிது தண்ணீர் விட்டு இவற்றை வேக வைக்கவும்.
உப்பு, மிளகாய் பொடி, எண்ணெய் இவற்றுடன் வெந்த காய்கறியை மசித்து சோள மாவுடன் சேர்க்கவும்.
நன்றாகக் கலக்கி தண்ணீர் விட்டு நல்ல மாவாக பிசைந்தெடுக்கவும்.
இந்த மாவில் பராத்தாக்களைச் செய்யவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சிறிது எண்ணெய் சேர்த்து பராத்தாக்களை வெந்த பின் எக்கவும்.
--------------------------------------------------------------------------------------------------
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – 1 கப்
கோதுமை மாவு – 1 மே.கரண்டி
வெல்லம் – 100கிராம்
தண்ணீர் – 1/2 கப்
ஏலக்காய் – 2
கிராம்பு – 2
தேங்காய் துருவல் – 2
மே.கரண்டி எண்ணெய் -11/2
மே.கரண்டி
செய்முறை:
வெல்லத்தை தண்ணீரில் கரைக்கவும். இதில் அரிசி மாவு, கோதுமை மாவு, தேங்காய் துருவல், பொடி செய்த ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றையும் சேர்த்து கலக்கவும்.
இதனை தோசை வார்க்க ஏற்றவாறு மாவாக்கிக் கொள்ள வேண்டும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் தடவிக் கொள்ளவும். ஒரு கரண்டி நிறைய மாவை எடுத்து அதனை தோசைக் கல்லில் வார்க்கவும்.
ஒரு புறம் வெந்தவுடன் மறுபுறமும் திருப்பி எண்ணெய் விட்டு வேக வைக்கவும்.
பயத்தம்பருப்பு தோசை
தேவையான பொருட்கள் 2 பேருக்கு
பயத்தம்பருப்பு [சிறுபருப்பு] – 1 கப்
தயிர் – 1/2 கப்
பச்சை மிளகாய் – 5 அல்லது 6
பூண்டு – 3 அல்லது 4 பல்
உப்பு தேவையான அளவு
செய்முறை
பயத்தம் பருப்பை தாராளமாக தண்ணீர் விட்டு 5 அல்லது 6 மணி நேரம் ஊரவிடவும்.
நன்கு ஊரியதும் பச்சை மிளகாய், பூண்டு,தண்ணீர் சேர்த்து மிருதுவாக அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த மாவில் தயிர்,உப்பு சேர்த்து நன்றாக தோசை மாவு பதத்திற்கு கலந்து வைத்துக்கொள்ளவும்.
தோசைகளை வார்த்து எடுத்து தேங்காய் சட்டினியுடன் சூடாக பரிமாறவும்.
குறிப்பு
மாவில் தண்ணீர் அதிகமிருந்தால் ஒரு தே. கரண்டி அரிசி மாவு கலந்து உபயோகிக்கலாம்.
மாவு ஓரளவுக்கு இலகுவாக இருக்கவேண்டும், கெட்டியாக இருந்தால் தோசை கடினமாக இருக்கும்.
தயிரை கடைந்தபின் மாவில் சேர்த்தால் கட்டி தட்டாது.
வேண்டுமளவு தயிர் சேர்த்துக்கொள்ளுங்கள் தோசையின் மென்மை கூடும். அளவுக்கதிகமானால் புளித்துவிடும் கவனம்.
சுவை நன்றாக இருக்க சூடாக இருக்கும்போதே உண்ணுங்கள். அவ்வளவுதான்.
=====================================================================
ஆப்பம்
தேவையானப்பொருட்கள்:
பச்சை அரிசி - ஒன்றரைக் கப்
புழுங்கலரிசி - ஒன்றரைக் கப்
உளுத்தம் பருப்பு - 1/4 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
ஆப்ப சோடா - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
தேங்காய்ப்பால் - 1/4 கப்
செய்முறை:
அரிசி, பருப்பு, வெந்தயம் அனைத்தையும் ஒன்றாக 6 முதல் 8 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் நன்றாகக் களைந்து, நீரை வடித்து விட்டு, மை போல் அரைத்தெடுக்கவும். அத்துடன் உப்பு போட்டுக் க்ரைத்து, இரவு முழுவதும் அல்லது 10 மணி நேரம் புளிக்க விடவும்.
மறுநாள், மாவில் ஆப்ப சோடா, 1/4 கப் தேங்காய்ப்பால் சேர்த்து நன்றாகக் கலக்கவும். தேவையான அளவு தண்ணீரைச் சேர்த்து, தோசைமாவை விட சற்று நீர்க்க கரைக்கவும்.
ஆப்பசட்டியை (இல்லையென்றால் அடி கனமான ஒரு வாணலியை) அடுப்பிலேற்றி சூடாக்கவும். தோசைத்துணி அல்லது சமையலறைத்தாளில் சிறிது எண்ணையைத் தொட்டு ஆப்பச்சட்டியை துடைத்து விடவும். பின்னர் ஒரு பெரிய கரண்டி மாவை அடுத்து சட்டியின் நடுவே ஊற்றி, சட்டியை இரு கைகளாலும் தூக்கி (ஒரு துணியால் பிடித்துக் கொண்டுதான்) ஒரு சுற்று சுற்றி, (மாவு சட்டியைச் சுற்றி பரவி, விடும்) அடுப்பில் வைத்து மூடி விடவும். ஓரிரு நிடங்களில் ஆப்பம் வெந்து விடும். மூடியைத் திறந்து ஆப்பம் நடுவில் வெந்திருக்கிறதா என்று பார்த்து (ஆப்பசட்டியை விரைவாகவும், சரியாகவும் சுற்றினால் அப்பம் ஓரத்தில் மெல்லியதாகவும், நடுவே திக்காவும் இருக்கும்) எடுத்து வைக்கவும். ஒரு கரண்டி காம்பால் இலேசாக நெம்பி விட்டாலே போதும். கையாலேயே எடுத்து விடலாம்.
ஒரு பக்கம் வெந்தால் போதும். திருப்பிப் போட தேவையில்லை.
No comments:
Post a Comment