Saturday, January 1, 2011

idly

வீட்டிலுள்ளவர்கள் அனைவரும் சாப்பிட்ட பிறகு, மிகுந்து விட்ட இட்லிகளை இப்படி ஒரு புதிய பொருளாகச் செய்யலாம்.

தேவையான பொருள்கள்:-
இட்லி – 12
பச்சை மிளகாய் – 4
வெங்காயம் – 3
எண்ணெய் – 5 மேஜைக் கரண்டி
கடுகு, உளுந்தம் பருப்பு – 2 மேஜைக் கரண்டி
கறிவேப்பிலை – கொஞ்சம்
மிளகு, சீரகத்தூள் – கொஞ்சம்

செய்முறை:-
இட்லியைச் சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள். பச்சை மிளகாயையும், வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றுங்கள்.
எண்ணெய் காய்ந்ததும், அதில் கடுகு, உளுந்தம் பருப்பைப் போட்டுத் தாளித்துக் கொள்ளுங்கள்.
பிறகு, பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலையைப் போடுங்கள்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், இட்லித் துண்டுகளைப் போட்டுக் கிளறி, மேலே மிளகு சீரகத் தூளைத் தூவிக் கொள்ளுங்கள்.
உங்கள் வீட்டுக் குழந்தைகள், பள்ளியிலிருந்து திரும்பி வந்ததும், இந்த இட்லி பொடிமாஸை மாலை டிபனாகக் கொடுக்கலாம்.

No comments:

Post a Comment